என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
Byமாலை மலர்22 Jan 2022 10:21 AM GMT (Updated: 22 Jan 2022 10:21 AM GMT)
சுமார் 150 பசுக்கள், 250 ஆடுகள், 70 நாய்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டியில் கால்நடை துறை சார்பில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடைத்துறை மண்டல உதவி இயக்குனர் பரிமளராஜ் தலைமை வகித்தார். அனுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்அர்ஜுனன் வரவேற்றார்.
முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, கருவூட்டல், சினை பரிசோதனை,தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம்,குடற்புழு நீக்கம், அறுவை சிகிச்சை,சுண்டு வாத அறுவை சிகிச்சை,கால்நடைகள் ஆண்மை நீக்கம் செய்தல் ஆகியவை நடைபெற்றது.
இதில் சுமார் 150 பசுக்கள், 250 ஆடுகள், 70 நாய்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கால்நடை ஆய்வாளர் சத்யா, உதவியாளர் செங்குட்டுவன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X