என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குரும்பூரில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
Byமாலை மலர்22 Jan 2022 10:10 AM GMT (Updated: 22 Jan 2022 10:10 AM GMT)
குரும்பூரில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் அழகப்புரம் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
குரும்பூர்:
தமிழகஅரசின் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் தமிழகம் முழுவதும் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. குரும்பூர் அடுத்த அழகப்பபுரம் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் செல்வகுமார் மற்றும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சந்தோசம் முத்துக்குமார் தலைமை தாங்கினர்.
இதில் அழகப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பூமாரி பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த கலப்பின கிடாரி கன்று உரிமையாளர்களுக்கு பரிசும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு விருதும் வழங்கினார்.
முகாமில் கால்நடை வளர்ப்பு, கால்நடைகள் நோய் மற்றும் அறிகுறிகள் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. முகாமில் நாலுமாவடி கால்நடை மருந்தக மருத்துவர் சுரேஷ் தலைமையில் பசுக்களுக்கு கருப்பை, சினைப் பரிசோதனை, ஆண்மை நீக்கம் மற்றும் குடல்புழு நீக்கம் போன்ற பணிகள் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X