search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அடையாளம் தெரியாத 2 பேர் சாவு

    நாட்டறம்பள்ளி அருகே இறந்த 2 பேர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே ஆர்.சி.எஸ் மெயின் ரோட்டில் உள்ள பங்களா கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாந்தோப்பில் சுமார் 45 வயது தக்க ஆண் பிணம் இருப்பதாக நாட்டறம்பள்ளி  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சிவன் கொடுத்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் மாநிறம் உடையவர் நீல நிற சட்டையும் வெள்ளை கலரில் நீல நிற கோடு போட்ட லுங்கி அணிந்து உள்ளார் இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்த என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதேபோல நாட்டறம்பள்ளி அடுத்த சஞ்சீவினூர் பகுதியில் உள்ள ரேசன் கடை எதிரில் சுமார் 45 வயது மதிக்க தக்கவர் சுயநினைவின்றி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்தார் இதனால் அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

    அங்கு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கேத்தாண்டப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மோனிகா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×