search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு, டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
    X
    விவசாயிகளுக்கு, டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.

    கால்நடைகளை சிறப்பாக பராமரித்த விவசாயிகளுக்கு பரிசு

    கால்நடைகளை சிறப்பாக பராமரித்த விவசாயிகளுக்கு பரிசுகளை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்-.ஏ வழங்கினார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட காலநடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் தஞ்சையை அடுத்த கடகடப்பை பகுதியில் நடைபெற்றது.
     
    இந்த முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை 
    இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சையது அலி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் அருளானந்தசாமி, உதவி இயக்குனர், பழனிவேல், ஊராட்சி மன்ற தலைவர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகம் முகாமை தொடங்கி வைத்தார். 

    முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் புஷ்பலதா, சரண்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். 

    முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் 
    செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்றை முறை கருவூட்டல் 
    செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்தல், சினை பரிசோதனை செய்தல், 
    சிறு அறுவை சிகிச்சைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
     
    சிறந்த கன்றுகளுக்கு பரிசும், கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்காக விவசாயிகளுக்கு சிறப்பு பரிசாக கேடயமும் வழங்கப்பட்டது. 

    முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    Next Story
    ×