search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வாலிபர் மீது தாக்குதல்- 3 பேருக்கு வலைவீச்சு

    களக்காடு அருகே வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகரை சேர்ந்தவர் வெட்டும் பெருமாள் மகன் அருண்பாண்டி (வயது29). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார். 

    கடந்த தீபாவளியன்று சிதம்பரபுரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். 

    இதைப்பார்த்த அருண்பாண்டி அவருக்கு உதவிகள் செய்தார். ஆனால் கிருஷ்ணகுமாரின் தந்தை முருகன், கிருஷ்ணகுமார் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்ததற்கு அருண்பாண்டிதான் காரணம் என்று கருதி அவரிடம் தகராறு செய்தார். 

     மேலும் அருண்பாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அருண்பாண்டி சிதம்பரபுரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 

    அப்போது அங்கு வந்த கிருஷ்ணகுமாரின் சகோதரர் வசந்தகுமார், பாலகிருஷ்ணன் மகன் கணேஷ்குமார் ஆகியோர் முருகனின் தூண்டுதலின் பேரில் அருண்பாண்டியை வழிமறித்து, அவரை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார்.  

    இதனால் காயம் அடைந்த அருண்பாண்டி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. 

    போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி முருகன், அவரது மகன் வசந்தகுமார், கணேஷ்குமார் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×