search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை

    செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இந்த விபரீத முடிவை எடுத்தார்.
    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அமர் நாயக். இவரது மகன் நித்திகா நாயக் (வயது22). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்.சி.ஏ., முதல் ஆண்டு படித்து வந்தார்.

    நித்திகா நாயக் வீட்டு வேலைகள் ஏதும் செய்யாமல் அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார். சம்பவத்தன்று மதியம் இவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பாட்டிற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது நித்திகா நாயக் தனது பெற்றோர் வந்தது கூட தெரியாமல் யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரது பெற்றோர் இனிமேல் நீ யாருடனும் செல்போனில் பேசக்கூடாது என செல்போனை பறித்தனர். பின்னர் சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்றனர். பெற்றோர் கண்டித்து செல்போனை பறித்து சென்றதால் நித்திகா மிகுந்த மனவேதனை அடைந்தார். 

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது சகோதரர்கள் அதிர்ச்சி யடைந்தனர். 

    பின்னர் இது குறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். 

    இந்த தகவல் கிடைத்ததும் வடவள்ளி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×