என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆண்டிபட்டி அருகே மூதாட்டி உள்பட 3 பேர் தற்கொலை
Byமாலை மலர்22 Jan 2022 8:35 AM GMT (Updated: 22 Jan 2022 8:35 AM GMT)
ஆண்டிபட்டி அருகே மூதாட்டி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே சோலைத்தேவன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜன் மனைவி கோலம்மாள் (வயது60). இவர்களது மகன்கள் மற்றும் மகள் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர்.
கோலம்மாளுக்கு ரத்த கொதிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் சம்பவத்தன்று விஷத்தை குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் (43). மது பழக்கத்திற்கு அடிமையானதால் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சரவணக்குமார் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே கன்னியபிள்ளைபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (62). இவருக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் பாலமுருகனுடன் வசித்து வந்தார். அடிக்கடி கால் வலி ஏற்பட்டது.
பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த சுப்புராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே சோலைத்தேவன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜன் மனைவி கோலம்மாள் (வயது60). இவர்களது மகன்கள் மற்றும் மகள் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர்.
கோலம்மாளுக்கு ரத்த கொதிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் சம்பவத்தன்று விஷத்தை குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் (43). மது பழக்கத்திற்கு அடிமையானதால் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சரவணக்குமார் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே கன்னியபிள்ளைபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (62). இவருக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் பாலமுருகனுடன் வசித்து வந்தார். அடிக்கடி கால் வலி ஏற்பட்டது.
பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த சுப்புராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X