search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் பறிப்பு
    X
    செல்போன் பறிப்பு

    வக்கீலிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது

    மதுரையில் வக்கீலிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை

    மதுரை திருப்பாலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய காலனியைச் சேர்ந்தவர் சுந்தர்(வயது 53). வக்கீலான இவர் சம்பவத்தன்று இரவு மீனாட்சி கல்லூரி அருகே நடந்து சென்றார். 

    அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுந்தரை மறித்து அவரின் செல்போனை பறிக்க முயன்றனர். இதில் சுதாரித்துக் கொண்ட சுந்தர், கொள்ளையர்களை விரட்டி பிடிக்க முயற்சி செய்து உள்ளார். பயந்துபோன கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர்.  இந்தநிலையில் தனிப்படை போலீசாரின் வாகன சோதனையின்போது வக்கீலிடம் செல்போன் பறிக்க முயன்ற நெல்பேட்டை சீனி ராவுத்தர் தெருவை சேர்ந்த ஜாகிர் ஹுசைன் மகன் அசாருதீன் (வயது 22) சிக்கினான். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடிவருகின்றனர்.
    Next Story
    ×