search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாராபுரம் தனியார் நர்சிங் கல்லூரியில் 30 மாணவிகளுக்கு கொரோனா

    விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தினசரி மார்க்கெட் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் சுமார் 50 மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் 5 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 மாணவிகளுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. 

    விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கல்லூரி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

    மேலும் தாராபுரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 காவலர்கள் மற்றும் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .
    Next Story
    ×