search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
    X
    மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

    ஆத்தூரில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    ஆத்தூரில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 9 ஆண்டுகளாக  பணியாற்றிவரும் தற்காலிக பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,  ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூர் சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் எதிரே 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    மேலும் இது தொடர்பாக மேலும் தபால் நிரப்பும் போராட்டம் நடைபெறுவதாக அறிவித்தனர். 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் இளையராஜா, மாவட்ட செயலர் ரத்தினவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×