என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தருமபுரி மாவட்டத்தில் ஒரேநாளில் 289 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்21 Jan 2022 7:24 AM GMT (Updated: 21 Jan 2022 7:24 AM GMT)
தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 289 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தருமபுரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 30,830 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 28,862 பேர் வரை குணமாகி வீட்டுக்கு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 115 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1312 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 281 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 10 முதல் 20 பேர் வரை மட்டுமே இருந்தது. கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. மேலும் பொது இடங்களில் பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்து வருகின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X