search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருச்செந்தூர் மளிகை கடையில் பொருட்கள் திருட்டு

    திருச்செந்தூரில் மளிகை கடையில் மர்ம நபர்கள் நள்ளிரவில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் தெற்கு புது தெரு பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது53). இவர் அவரது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 18-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கடையை அடைத்துவிட்டு சென்றுள்ளார். 

    நேற்று காலை 7 மணிக்கு கடையை திறந்து கடைக்குள் சென்று பார்த்தபோது கடையின் மேல் பகுதியில் உள்ள ஓட்டை வழியாக மர்ம நபர்கள் புகுந்து கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணம், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பிஸ்கட் பாக்கெட்டுகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. 

    இதுகுறித்து சத்தியசீலன் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×