என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாசரேத்தில் முதியவரை தாக்கிய 2 அ.தி.மு.க. பிரமுகர்கள் கைது
Byமாலை மலர்20 Jan 2022 11:01 AM GMT (Updated: 20 Jan 2022 11:01 AM GMT)
நாசரேத்தில் முன்விரோதம் காரணமாக முதியவரை தாக்கிய 2 அ.தி.மு.க. பிரமுகர்களை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் 6&வது தெருவை சேர்ந்தவர் கமலசேகர் (வயது 72).
இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராம்கோபாலன் (51) என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கமலசேகர் நாசரேத்தில் ஒரு டீக்கடை யில் டீ குடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த ராம் கோபாலனுக்கும், கமலசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ராம்கோபாலன், அவரது நண்பர் சாது இம்மானுவேல்(31) ஆகிய 2 பேரும் கமலசேகரை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கமலசேகர் நாசரேத் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்& இன்ஸ்பெக்டர் தங்கேஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து கமலசேகரை தாக்கியதாக ராம்கோபாலன், சாது இம்மானுவேல் ஆகிய 2 பேரை கைது செய்தார்.
கைதான ராம்கோபாலன் ஆழ்வார்திருநகரி ஒன்றிய அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். சாது இம்மானுவேலும் அ.தி.மு.க. பிரமுகர் ஆவார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X