என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம் - திருப்பூரில் நாளை நடக்கிறது
Byமாலை மலர்20 Jan 2022 10:00 AM GMT (Updated: 20 Jan 2022 10:00 AM GMT)
46-வது வார்டு முதல் 60-வது வார்டு வரை எஸ்.ஆர்.நகரில் உள்ள ரத்தின விநாயகர் கோவில் மாநகராட்சி மண்டபத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள அனுமதியற்ற மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற வசதியாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
அதன்படி நாளை 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 4 மண்டல அலுவலகங்களில் முகாம்கள் நடக்கிறது.
1-வது வார்டு முதல் 15-வது வார்டு வரை வேலம்பாளையத்தில் உள்ள முதலாவது மண்டல அலுவலகத்திலும், 16-வது வார்டு முதல் 30-வது வார்டு வரை நஞ்சப்பா நகரில் உள்ள 2-வது மண்டல அலுவலகத்திலும், 31-வது வார்டு முதல் 45-வது வார்டு வரை நல்லூரில் உள்ள 3-வது மண்டல அலுவலகத்திலும், 46-வது வார்டு முதல் 60-வது வார்டு வரை எஸ்.ஆர்.நகரில் உள்ள ரத்தின விநாயகர் கோவில் மாநகராட்சி மண்டபத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
பத்திரம் நகல், 2016-ம் ஆண்டுக்கு முன்பு பெற்ற மூலபத்திரம் நகல், பட்டா, சிட்டா நகல், மனைப்பிரிவு வரைபடம் நகல், வில்லங்க சான்று நகல், ஆதார்கார்டு நகல் ஆகியவற்றுடன் முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X