search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

    உப்பிலிபாளையம் அண்ணா நகர் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி உப்பிலிபாளையம் அண்ணா நகர் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .

    இதையடுத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபு தலைமையிலான போலீசார் அந்தப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர் .

    அப்போது அண்ணாநகர் அம்மா பூங்கா பின்புறம் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிபாசு(வயது 30), கார்த்திக்(29), தமிழ்வாணன்(28) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ. 3,700 மற்றும் சீட்டுக்கட்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×