search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

    கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கரூர்:

    குடியரசு தின ஊர்வலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வேலுநாச்சியார், பாரதியார், வ.உ.சிதம்பரம் ஆகியோர்      படங்களை கொண்ட தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    மத்திய  பா.ஜ.க.  அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து  இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாவட்டக்குழு சார்பில்  அக்கட்சியின்  மாவட்ட செயலாளர் எம்.ரத்தினம் தலைமையில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட துணைசெயலாளர்கள் கே.சண்முகம், எஸ்.மோகன்குமார், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர்  எம்.லட்சுமி  காந்தன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.தங்கவேல், மாவட்ட நிர்வாகக்குழு கே.சுப்பிரமணி,     செயலாளர்கள் இனாம் கரூர் பி.சக்திவேல், கரூர் நகரம்  கே.எஸ். நேதாஜி,  ஏ.ஐ.டி.யு.சி.  ஜி.பி. எஸ்.வடிவேலன், ஏ.ஐ.டி.யு.சி. அரசுப் போக்குவரத்து ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×