search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    மங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    ஒப்பந்த கூலியை அமல்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
    மங்கலம்:

    விசைத்தறி கூலி பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி மங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். 

    ஆர்ப்பாட்டத்தில் இடுவாய் ஊராட்சி மன்றத்  தலைவர் கே. கணேசன், திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி, விசைத்தறி சங்க மாநில தலைவர் முத்துசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த கூலியை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க வேண்டும், பல லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் வேலையின்றி தவிப்பதை  தடுக்க நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
    Next Story
    ×