search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விஷம் குடித்து பெண் தற்கொலை

    பூவாத்தாள் பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    காங்கேயம்:

    காங்கேயம் அடுத்துள்ள பொங்குத்திபாளையம் வடக்குத்தோட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவரது மனைவி பூவாத்தாள் (வயது55). இவர் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சிறுநீராக நோய் உள்ளிட்ட சில நோய்களால் அவதிப்பட்டு வந்தார். 

    இதற்கு சில லட்சங்கள் வரை செலவு செய்து சிகிச்சை அளித்தும் நலம் பெற முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து போன பூவாத்தாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து தகவல் அறிந்த காங்கேயம் போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×