search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
    X
    குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

    திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

    திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களையும் நீரையும் ஆய்வுக்கு அனுப்பிய பின் மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.

    கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் குளக்கரையில் பக்தர்களுக்கு தர்ப்பணம் மற்றும் நீராட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

    தற்போது கோயில் குளத்தில் விடப்பட்டிருந்த மீன்கள் நன்கு வளர்ந்து 2 கிலோ முதல் 5 கிலோ வரை காணப்படுகிறது.

    இந்த நிலையில் கோவில் குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் இன்று காலை செத்து மிதந்தன. சுமார் 1 டன் எடை கொண்ட மீன்கள் இறந்து கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி மீன்களையும் நீரையும் ஆய்வுக்கு அனுப்பிய பின் மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×