search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
    X
    திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் தீர்த்தவாரி விழா நடைபெற்றது.

    மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரி

    திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரி நடைபெற்றது.
    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி 
    கோவில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானது. 

    இந்த கோவிலில் தைப்பூச பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு கடந்த 9-ந்தேதி 
    மகாலிங்க சுவாமி கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    தொடர்ந்து 8-ம் நாள் வரை ஒவ்வொரு வாகனத்தில் மகாலிங்க 
    சுவாமி காட்சியளித்தார். இந்நிலையில் 9-ம் திருநாளை முன்னிட்டு தேரோட்டம் அதிகாலை நடைபெற்றது. 

    தொடர்ந்து 10-ம் நாள் திருவிழாவாக தைப்பூச தீர்த்தவாரியையொட்டி 
    காலை பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் காவிரி ஆற்றில் எழுந்தருளினார். 

    தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் தைப்பூசத் தீர்த்தவாரி 
    நடைபெற்றது. இரவு வெள்ளிரதக் காட்சி நடைபெற்றது. 
    ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.
    Next Story
    ×