search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உடன்குடியில் விவசாயி மொபட்டில் புகுந்த பாம்பால் பரபரப்பு

    உடன்குடியை சேர்ந்த விவசாயி ஒருவர் மொபட்டில் பாம்பு புகுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    உடன்குடி:

    உடன்குடியை சேர்ந்த 50 வயது விவசாயி ஒருவர், தனக்கு சொந்தமான மொபட்டில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். 

    வீட்டில் உள்ள மாடுகளுக்கு தேவையான தீவணங்களை சேகரித்துக் கொண்டு, தனது வாகனத்தில் பின்னால் வைத்துக் கட்டிக் கொண்டு வீடுதிரும்பினார். 

    ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது,  வண்டியின் பெட்ரோல் டேங் கவரில் இருந்த பாம்பு ஒன்று தலையை நீட்டிஎட்டி பார்த்துள்ளது.

    இதைப்பார்த்த விவசாயி பாம்பு, பாம்பு என்று அலறிக் கொண்டு நடுரோட்டில் வாகனத்தை போட்டுவிட்டு ஓடிவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

    பின்னர் பாம்பு காட்டுக்குள் ஓடி விட்டது. ரோட்டில் வந்த மற்றவர்கள் பாம்பு ஓடி விட்டது என்று கூறிய பிறகு  விவசாயி தனது மொபட்டை எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.
    Next Story
    ×