என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எண்கண் கோவிலில் தைப்பூசத் விழா
Byமாலை மலர்19 Jan 2022 9:43 AM GMT (Updated: 19 Jan 2022 9:43 AM GMT)
திருவாரூர் அருகே எண்கண் கோவிலில் தைப்பூசத் திருவிழா நடந்தது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் எண்கண் சுப்ரமணிய சுவாமி கோவிலில்
தைப்பூச விழா நடைபெற்றது.
கடந்த 9-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய தைப்பூச
விழாவின் 10 நாளான நேற்று காலை வள்ளிதேவசேன சமேத சண்முகபெருமானுக்கும், சுப்ரமணியருக்கும் எண்ணெய் காப்பு மண்டபத்தில் மகா அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து சண்முகபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து
அலங்கார தீபம், சோடச உபச்சாரங்கள் பஞ்சார்த்தி தீபாராதனை நடைப்பெற்றது.
பின்னர் சண்முகர் முன்னோட்டம், பின்னோட்டமாக ஆடியபடி பிரகார
வலம் வந்து வசந்த மண்டபத்திற்கு சென்று மகா தீபாரதனை
நடைபெற்றது.
தொடர்ந்து சுப்ரமணியர் ரிஷப வாகனத்தில் வைக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வீதியுலா
சென்று தீர்த்தவாரி நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X