என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எண்ணூரில் கடலில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் மாயம்
Byமாலை மலர்19 Jan 2022 8:24 AM GMT (Updated: 19 Jan 2022 9:13 AM GMT)
கடலில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் மாயமான சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் மாணவனை தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் நிர்மல். இவருடைய மகன் தனுஷ் (வயது 18). இவர், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.நேற்று தனுஷ், தன்னுடைய தம்பி தமிழ்ச்செல்வன் (14), நண்பர்கள் வெங்கடேசன் (19), ருத்ரன் (13), விக்னேஷ் (16), அவருடைய தாயார் செல்வி (35) ஆகியோருடன் எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரைக்கு வந்து கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலையில் சிக்கிய தனுஷ் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சகநண்பர்கள், வெளியே ஓடி வந்து தனுசை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். உடனடியாக அருகில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், கடலில் மூழ்கிய மாணவன் தனுசை தேடி வருகின்றனர்.
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் நிர்மல். இவருடைய மகன் தனுஷ் (வயது 18). இவர், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.நேற்று தனுஷ், தன்னுடைய தம்பி தமிழ்ச்செல்வன் (14), நண்பர்கள் வெங்கடேசன் (19), ருத்ரன் (13), விக்னேஷ் (16), அவருடைய தாயார் செல்வி (35) ஆகியோருடன் எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரைக்கு வந்து கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலையில் சிக்கிய தனுஷ் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சகநண்பர்கள், வெளியே ஓடி வந்து தனுசை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். உடனடியாக அருகில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், கடலில் மூழ்கிய மாணவன் தனுசை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X