என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
Byமாலை மலர்19 Jan 2022 8:18 AM GMT (Updated: 19 Jan 2022 8:18 AM GMT)
கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சுற்றுலா பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரி விளங்குகிறது. சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையினரிடம் அனுமதி சீட்டு பெறவேண்டும். கொரோனா ஊரடங்கு காரணமாக பேரிஜம் ஏரி மூடப்பட்டது.
அதனை தொடர்ந்து வனவிலங்குகள் அச்சுறுத்தல் மற்றும் தொடர் மழை காரணமாக வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கப்படவில்லை. நீண்ட நாட்களாக பேரிஜம் ஏரிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
எனவே இங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி பேரிஜம் ஏரியை சுற்றிப்பார்க்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாகவே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி முடிவடைந் ததும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரி விளங்குகிறது. சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையினரிடம் அனுமதி சீட்டு பெறவேண்டும். கொரோனா ஊரடங்கு காரணமாக பேரிஜம் ஏரி மூடப்பட்டது.
அதனை தொடர்ந்து வனவிலங்குகள் அச்சுறுத்தல் மற்றும் தொடர் மழை காரணமாக வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கப்படவில்லை. நீண்ட நாட்களாக பேரிஜம் ஏரிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
எனவே இங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி பேரிஜம் ஏரியை சுற்றிப்பார்க்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாகவே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி முடிவடைந் ததும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X