என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மதுரையில் நிதி நிறுவனத்தில் கொள்ளை
Byமாலை மலர்18 Jan 2022 12:22 PM GMT (Updated: 18 Jan 2022 12:22 PM GMT)
மதுரையில் நிதி நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் திருவாதவூர் மல்லிகை நகரை சேர்ந்தவர் குருசாமி (வயது48). இவர் எஸ்.எஸ். காலனியில் உள்ள துரைசாமி நகர் பகவதி தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
பொங்கல் பண்டிகையையொட்டி நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றார். சம்பவத்தன்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் நிதி நிறுவனத்துக்குள் புகுந்து அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்தநிலையில் அலுவலகத்துக்கு வந்த குருசாமி பீரோ கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 லட்சத்து 11 ஆயிரத்து 990 ரூபாய் கொள்ளளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் எஸ்.எஸ்.காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. எனவே போலீசார் அந்த பகுதியில் 24மணிநேரமும் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க வேண்டிய எஸ்.எஸ்.காலனி குற்றப்புலனாய்வு பிரிவில் போலீசாருக்கு கடும் பற்றாக்குறை உள்ளது.
சப்-&இன்ஸ்பெக்டர் உள்பட பலர் இன்னமும் நியமிக்கப்படவில்லை. எனவே அங்கு குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவது போலீசாருக்கு பெரிதும் சவாலாக விளங்கி வருகிறது.
எனவே மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X