என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
10-ம் வகுப்பு மாணவிக்கு வீடு புகுந்து முத்தம் கொடுத்த வாலிபர் கைது
Byமாலை மலர்18 Jan 2022 11:04 AM GMT (Updated: 18 Jan 2022 11:04 AM GMT)
திருவள்ளூர் அருகே ஒருதலை காதலில் 10-ம் வகுப்பு மாணவிக்கு வீடு புகுந்து முத்தம் கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த குத்தம்பாக்கம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரை அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சதீஷ் குமார் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த சதீஷ் குமார் திடீரென வீட்டிற்குள் புகுந்து மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சதீஷ்குமாரை மடக்கிப்பிடித்து வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் அடைத்து சிறை வைத்தனர்.
பின்னர் இது குறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சதீஷ்குமாரை மீட்டு விசாரணை நடத்தினர்.
அவர் மாணவியிடம் அத்துமீறி நடந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து சதீஷ்குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த குத்தம்பாக்கம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரை அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சதீஷ் குமார் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த சதீஷ் குமார் திடீரென வீட்டிற்குள் புகுந்து மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சதீஷ்குமாரை மடக்கிப்பிடித்து வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் அடைத்து சிறை வைத்தனர்.
பின்னர் இது குறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சதீஷ்குமாரை மீட்டு விசாரணை நடத்தினர்.
அவர் மாணவியிடம் அத்துமீறி நடந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து சதீஷ்குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X