என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
Byமாலை மலர்18 Jan 2022 9:15 AM GMT (Updated: 18 Jan 2022 9:15 AM GMT)
விவேகானந்தரின் பிறந்தநாளை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி வினாடி-வினா மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
உடுமலை:
உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பாக சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி வினாடி-வினா மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இணையவழி வினாடி வினா போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து 600-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பதில் அளித்தனர். அதில் முதல் 3 இடங்களைப் பிடித்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட உள்ளது.
1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியில் முதலிடம் பெற்ற உடுமலை சீனிவாசா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 4-ம் வகுப்பு மாணவர் சபரிராஜாவுக்கு பரிசும் சான்றிதழும் உடுமலை காந்தி நகரில் உள்ள கலிலியோ அறிவியல் கழக மையத்தில் வழங்கப்பட்டது.
பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் ,கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் மற்றும் செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் பரிசினையும் சான்றிதழையும் வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X