என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் பஸ் கண்டக்டர் அடித்துக்கொலை?
Byமாலை மலர்18 Jan 2022 7:05 AM GMT (Updated: 18 Jan 2022 7:05 AM GMT)
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் உடலில் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம், கொடிமர தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 36). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுடலி (34).
சம்பவத்தன்று மகராஜன் மாட்டுத்தொழுவத்தில் வழுக்கி விழுந்து விட்டதாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 3-ந்தேதி மகராஜன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மகராஜன் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுமதித்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பிரேத பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் மகாராஜன் உடலில் பல்வேறு இடங்களில் அடித்ததற்கான தடயங்கள் இருந்ததும், அவரது கழுத்துப் பகுதியில் நெரிக்கப்பட்டு அதற்கான அடையாளம் உள்ளதும் தெரியவந்தது.
இதுகுறித்து அதிர்ச்சியடைந்த மேலப்பாளையம் போலீசார், மகாராஜன் அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் மகாராஜன் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானால், கொலைக்கு உடந்தையாக இருந்தது யார் யார் என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X