என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாவூர்சத்திரத்தில் விபத்தில் சாலை பணியாளர் பலி
Byமாலை மலர்18 Jan 2022 6:58 AM GMT (Updated: 18 Jan 2022 6:58 AM GMT)
விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ஒருவர் தென்காசி-நெல்லை இடையே நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணியில் ஊழியராக பணி செய்தபோது மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார்.
வீ. கே. புதூர்:
விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது38). தென்காசி-நெல்லை இடையே நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணியில் ஊழியராக பணி செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 11-ந்தேதி சாலைப்புதூரில் பணி நிமித்தமாக சாலையை கடக்கும்போது எதிரே பாவூர்சத்திரம் அருகே உள்ள இலங்காபுரிபட்டணத்தை சேர்ந்த பிரதாப் (19) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சீனிவாசன் மீது மோதியது.
இதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X