search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாவூர்சத்திரத்தில் விபத்தில் சாலை பணியாளர் பலி

    விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ஒருவர் தென்காசி-நெல்லை இடையே நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணியில் ஊழியராக பணி செய்தபோது மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார்.
    வீ. கே. புதூர்:

    விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தை  சேர்ந்தவர் சீனிவாசன் (வயது38). தென்காசி-நெல்லை இடையே நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணியில் ஊழியராக பணி செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி சாலைப்புதூரில் பணி நிமித்தமாக சாலையை கடக்கும்போது எதிரே பாவூர்சத்திரம் அருகே உள்ள இலங்காபுரிபட்டணத்தை சேர்ந்த பிரதாப் (19) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சீனிவாசன் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×