search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் விபத்து.
    X
    மோட்டார் சைக்கிள் விபத்து.

    அரசு பஸ் மோதி பெண் சாவு

    திருமங்கலம் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் அரசு பஸ் மோதி பலியானார்.
    திருமங்கலம்

    விருதுநகர் காமராஜர் நகரை  சேர்ந்தவர் நிக்சன் பிரபாகரன். இவரது மனைவி சசிகலா (வயது 25). இவர்களது மகள் ஜாக்லின் பிரபா (2). 

    இவர்கள் நேற்று பேரையூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக   இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர்.  கல்லுப்பட்டி வழியாக பேரையூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது பின்னால் அரசு பஸ் வந்தது. அந்த பஸ் எதிர்பாராதவிதமாக  இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சசிகலா உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார். 

    விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேனி வனத்துறை சாலையை சேர்ந்த பஸ் டிரைவர் சந்தானம் (34) கைது செய்யப்பட்டார்.
    Next Story
    ×