search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில்
    X
    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில்

    ராமேசுவரம் கோவில் தெப்பத்திருவிழா ரத்து

    ராமேசுவரம் கோவிலில் நாளை நடைபெற இருந்த தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்படுவதாக கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச  திருவிழா  சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா அன்று கோவிலில் இருந்து சாமி- அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி உப கோவிலான  லட்சுமணேசுவரர் கோவிலுக்கு வந்தடைவர்.

    தொடர்ந்து அங்கு மாலை 4 மணி அளவில்  மின்விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி மற்றும் அம்பாள் வைக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடத்தப்படும்.  பின்னர் மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட சாமியுடன் கூடிய தெப்பமானது தெப்பக்குளத்தை 15 முறை சுற்றி வரும் நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல்  தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைப்பூச தெப்ப திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.  

    லட்சுமணன் ஈஸ்வர கோவிலின் தெப்பக்குளத்தில் இன்று (ஞாயிற்றுக் கிழமை)  மாலை நடைபெற இருந்த பிள்ளையார் தெப்பத்தை சுற்றிவரும் நிகழ்ச்சியும், நாளை (17-ந்தேதி) மாலை 4 மணி அளவில் நடைபெற இருந்த சாமி- அம்பாள் தெப்பத்தை சுற்றி வரும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதற்கு பதிலாக கோவிலின் உள்ளேயே வைத்து  சாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
    Next Story
    ×