என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 சதவீத மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
Byமாலை மலர்15 Jan 2022 11:14 AM GMT (Updated: 15 Jan 2022 11:14 AM GMT)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 சதவீத மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசியை செலுத்தி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் இதுவரை 18 ஆயிரத்து 784 கர்ப்பிணிகளுக்கும், 18268 பாலூட்டும் தாய்மார்களுக்கும், 70 ஆயிரத்து 932 இதர நோயாளிகளுக்கு என மொத்தம் 11 லட்சத்து 92 ஆயிரத்து 285 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 9 லட்சத்து 9 ஆயிரத்து 138 பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வசதியாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது பூஸ்டர் ஊசி போடும் பணியும் நடந்து வருகிறது. முதற்கட்டமாக 26 ஆயிரத்து 500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் தற்போதைய கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள 475 பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் 74 ஆயிரத்து 655 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இதுவரை 71 ஆயிரத்து 617 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுமார் 95 சதவீதம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறையும் பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X