என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமங்கலம் அருகே சாலை விபத்துகளில் 2 பேர் பலி
Byமாலை மலர்15 Jan 2022 10:58 AM GMT (Updated: 15 Jan 2022 10:58 AM GMT)
திருமங்கலம் அருகே நடந்த இருவேறு விபத்துகளில் லாரி டிரைவர் மற்றும் பெண் பலியானார்.
திருமங்கலம்
கள்ளிக்குடி அருகே உள்ள சோளம்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது 45) பெயிண்டர். இவரது மனைவி வீரலட்சுமி (38). இருவரும் திருமங்கலம் வந்து சீர்வரிசைக்கான அண்டாவை வாங்கி கொண்டு டூவிலரில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
மதுரை விருதுநகர் 4 வழி சாலையில் சிவரக்கோட்டை அருகே சென்றபோது அண்டா கீழே விழ முயலவே வீரலட்சுமி அதனை பிடிக்க முயன்றார். அப்போது வண்டியில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
மதுரை அரசுமருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப் பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருமங்கலத்தை அடுத்துள்ள சித்தாலையை சேர்ந்தவர் ராஜ்குமார் (28). கப்பலூர் ஐ.ஓ.சி.யில் லாரி டிரைவராக பணிபுரிந்தார்.
உரப்பனூர் கிராமத்தில் இவரது உறவினர் இறப்புக்கு சென்றுவிட்டு மீண்டும் ராஜ்குமார் டூவிலரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
சித்தாலை அருகே சென்ற போது முன்னால் நின்று கொண்டிருந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.
இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X