என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருக்கோவிலூர் பகுதியில் நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயம்
Byமாலை மலர்15 Jan 2022 10:41 AM GMT (Updated: 15 Jan 2022 10:41 AM GMT)
திருக்கோவிலூர் பகுதியில் நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள கொழுந்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மகள் ரேணுகா (வயது 23). இவர் சம்பவத்தன்று மணம்பூண்டி கிராமம் வரை சென்று வருவதாக கூறிச்சென்றார். அதன்பின்னர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சி அடைந்த ராஜா தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இது குறித்து அவரது தாய் அஞ்சுகம் மணலூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல்போன ரேணுகாவை தேடிவருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
அதேபோல் மணலூர் பேட்டை போலீஸ் சரகம் அத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகள் சிவ ஜோதி (17). இவர் வீட்டில் தூங்கிய போது திடீர் என மாயமானார்.
இதுகுறித்து அவரது தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல்போன சிவஜோதியை தேடிவருகின்றனர்.
அதேபோல் திருக்கோவிலூர் பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின்பிரபாகரன் மகள் டெல்பிஜெஸ்டினாமேரி (22) நர்சிங் படித்துவிட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரையும் காணவில்லை.
இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் புகாரின் பேரில் வழக்கு செய்தனர். என்றாலும் 3 இளம்பெண்களும் எங்கு சென்றார்கள்? கடத்தப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கோவிலூர் அருகே உள்ள கொழுந்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மகள் ரேணுகா (வயது 23). இவர் சம்பவத்தன்று மணம்பூண்டி கிராமம் வரை சென்று வருவதாக கூறிச்சென்றார். அதன்பின்னர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சி அடைந்த ராஜா தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இது குறித்து அவரது தாய் அஞ்சுகம் மணலூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல்போன ரேணுகாவை தேடிவருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
அதேபோல் மணலூர் பேட்டை போலீஸ் சரகம் அத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகள் சிவ ஜோதி (17). இவர் வீட்டில் தூங்கிய போது திடீர் என மாயமானார்.
இதுகுறித்து அவரது தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல்போன சிவஜோதியை தேடிவருகின்றனர்.
அதேபோல் திருக்கோவிலூர் பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின்பிரபாகரன் மகள் டெல்பிஜெஸ்டினாமேரி (22) நர்சிங் படித்துவிட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரையும் காணவில்லை.
இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் புகாரின் பேரில் வழக்கு செய்தனர். என்றாலும் 3 இளம்பெண்களும் எங்கு சென்றார்கள்? கடத்தப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X