என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தென்காசி அருகே தங்கைக்கு சீர்வரிசை கொண்டு சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கும்பல்
ஆலங்குளம்:
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்தவர் விமலா(வயது 32). தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுரண்டை போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். நேற்று பொங்கலையொட்டி ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரிக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக விமலா சென்றுள்ளார்.
போலீஸ் உடை இல்லாமல் சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் அவர் சென்றுள்ளார். நெட்டூர் பஸ் நிறுத்தம் அருகே சீர்வரிசை பொருட்களுடன் அவர் சென்றபோது அங்கு சிலர் மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாமல் மறித்து கொண்டு நின்றுள்ளனர்.
உடனே மோட்டார் சைக்கிளில் வந்த விமலா ஹாரன் அடித்துள்ளார். ஆனாலும் அவர்கள் யாரும் திரும்பி பார்க்காமல் தொடர்ந்து வழியை மறித்துக் கொண்டு அங்கேயே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
இதனால் கோபம் அடைந்த விமலா அவர்களிடம் ஓரமாக நின்று பேசுமாறு கூறி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் விமலாவை அவதூறாக பேசி கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் அவரின் ஆடையையும் கிழிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். காயம் அடைந்த விமலா நெட்டூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் விமலா புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சப்-இன்ஸ்பெக்டர் விமலாவை தாக்கியது நெட்டூரை சேர்ந்த வெள்ள துரை, வேல்முருகன், மாரியப்பன்(20) மற்றும் கண்ணன்(25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வந்தனர். மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்