என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கன்னியாகுமரி கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத கடல் ஆமை
Byமாலை மலர்15 Jan 2022 10:27 AM GMT (Updated: 15 Jan 2022 10:27 AM GMT)
கன்னியாகுமரி கடற்கரையில் இறந்த நிலையில் ராட்சத கடல் ஆமை கரை ஒதுங்கியது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி வாவத்துறை தூண்டில் வளைவு கடற்கரை பகுதியில் ராட்சத கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதனை அந்த பகுதியில் ரோந்து சென்ற கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் அவர்கள் இதுபற்றி பூதப்பாண்டி வனச்சரக அலுவகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனச்சரகர் திலீபன் உத்தரவு படி மருந்துவாழ் மலை வனக் காப்பாளர் பிரபாகர், வனக் காவலர் ஜோயல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கப்பலில் அடிபட்டு இறந்த நிலையில் அழுகியபடி இருந்த ராட்சத கடல் ஆமையினை கைப்பற்றினார்கள்.
பின்னர் அந்த ராட்சத கடல் ஆமை வாரியூர் கால்நடை மருத்துவரால் உடற்கூறு ஆய்வு செய்து மணலில் புதைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X