search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 112 பேர் கைது

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீசார் நேற்று தீவிர ரோந்து மேற்கொண்டனர். இதில் 112 பேரை கைது செய்தனர்.
    தூத்துக்குடி:


    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீசார் நேற்று தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

    நேற்று ஒரே நாளில்  தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்திவிட்டு அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள் என  மொத்தம் 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    மேலும் 112 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1250 மதுபாட்டில்கள், கஞ்சா, புகையிலைப் பொருட்கள், ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ரூ.5,000 பறிமுதல் செய்யப்பட்டது. 
    Next Story
    ×