என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடன்குடியில் குளம் சீரமைப்பு-அதிகாரிகள் பாராட்டு
Byமாலை மலர்15 Jan 2022 8:06 AM GMT (Updated: 15 Jan 2022 8:06 AM GMT)
உடன்குடி வட்டார பகுதியில் பொதுமக்கள் முயற்சியுடன் 6 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்ததை அதிகாரிகள் பாராட்டினர்.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் 7 ஏக்கரில் நரிக்குளம், 2 ஏக்கரில் வடக்கு தெருக்குளம், 2 ஏக்கரில் அய்யனார்குளம், 2 ஏக்கரில் சிறுகுளம், 2 ஏக்கரில் இடையர்குளம், 7 ஏக்கரில் மாநாட்சிகுளம் ஆகிய ஆறு குளங்களில் முழுமையாக உடை மரங்கள் மற்றும் காட்டு செடிகள் வளர்ந்து குளம் அழிந்த நிலையில் இருந்தது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்பு ஊர் கூடி ஊரணி அமைப்போம் என்ற தொண்டு நிறுவனம் உதவியுடன் உடன்குடி பகுதியில் அழிந்து போன நீர்வளத்தை மீட்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் பங்களிப்புடன் 6 குளங்களும் சுத்தப்படுத்தப்பட்டது.
மேலும் குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய் புதுப்பிக்கப்பட்டு, தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், மருதூர் மேலக்கால் நீர் பகிர்மான பொறியாளர் நவீன் பிரபு, தொழில்நுட்ப உதவியாளர் சுப்பையா மற்றும் அதிகாரி ரகுநாதன் ஆகியோர் 6 புதிய குளங்களையும் பார்வையிட வந்தனர்.
பொதுமக்கள் முயற்சியுடன் 6 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்ததை அதிகாரிகள் பாராட்டினர்.
அதிகாரிகளை சந்தித்த விவசாயிகள், மற்றும் நீர்வளத்தை மீட்ட தொண்டு நிறுவனத்தினர் இந்த 6 குளங்களும் முழுமையாக நிரம்பும் வரை சடையநேரி கால்வாயில் தண்ணீர் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உடன்குடி வட்டார பகுதியில் 7 ஏக்கரில் நரிக்குளம், 2 ஏக்கரில் வடக்கு தெருக்குளம், 2 ஏக்கரில் அய்யனார்குளம், 2 ஏக்கரில் சிறுகுளம், 2 ஏக்கரில் இடையர்குளம், 7 ஏக்கரில் மாநாட்சிகுளம் ஆகிய ஆறு குளங்களில் முழுமையாக உடை மரங்கள் மற்றும் காட்டு செடிகள் வளர்ந்து குளம் அழிந்த நிலையில் இருந்தது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்பு ஊர் கூடி ஊரணி அமைப்போம் என்ற தொண்டு நிறுவனம் உதவியுடன் உடன்குடி பகுதியில் அழிந்து போன நீர்வளத்தை மீட்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் பங்களிப்புடன் 6 குளங்களும் சுத்தப்படுத்தப்பட்டது.
மேலும் குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய் புதுப்பிக்கப்பட்டு, தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், மருதூர் மேலக்கால் நீர் பகிர்மான பொறியாளர் நவீன் பிரபு, தொழில்நுட்ப உதவியாளர் சுப்பையா மற்றும் அதிகாரி ரகுநாதன் ஆகியோர் 6 புதிய குளங்களையும் பார்வையிட வந்தனர்.
பொதுமக்கள் முயற்சியுடன் 6 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்ததை அதிகாரிகள் பாராட்டினர்.
அதிகாரிகளை சந்தித்த விவசாயிகள், மற்றும் நீர்வளத்தை மீட்ட தொண்டு நிறுவனத்தினர் இந்த 6 குளங்களும் முழுமையாக நிரம்பும் வரை சடையநேரி கால்வாயில் தண்ணீர் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X