search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்கள் மடியேந்தி போராட்டம்
    X
    தூய்மை பணியாளர்கள் மடியேந்தி போராட்டம்

    தூய்மை பணியாளர்கள் மடியேந்தி போராட்டம்

    பட்டுக்கோட்டை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகராட்சியில் சுய உதவிக்குழு மூலம்  
    ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு இதுநாள் வரை சம்பளம் தராத பட்டுக்கோட்டை 
    நகராட்சியை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை 
    பணியாளர்கள் மடியேந்தி பிச்சை எடுக்கும் நூதன 
    போராட்டத்தை பட்டுக்கோட்டை நகராட்சி வளாகத்தில் நடத்தினர்.

    தகவல் அறிந்த சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து 
    சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பணியாளர்கள் 
    கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×