என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொங்கலூர் பகுதியில் நெல் சாகுபடி
Byமாலை மலர்13 Jan 2022 5:43 AM GMT (Updated: 13 Jan 2022 5:43 AM GMT)
பல மாதங்களாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
பொங்கலூர்:
பொங்கலூர் வட்டாரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. திரும்பிய பக்கமெல்லாம் நெற்பயிர்களாக காட்சியளித்தது. 3 மண்டலமாக இருந்ததை நான்கு மண்டல பாசனமாக மாற்றப்பட்ட பின் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
மழையும் அடிக்கடி பொய்த்து போனதால் விவசாயிகள் நெல் சாகுபடியை கைவிட்டனர். நெல் சாகுபடி செய்த நிலங்களில் தக்காளி, வெங்காயம், மக்காச்சோளம் போன்ற மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபட்டனர்.
நீண்ட காலத்திற்கு பின் தற்போது தான் நல்ல மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பல மாதங்களாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மழைநீருடன் கால்வாய் தண்ணீரும் சேர்ந்துள்ளதால் தண்ணீர் உபரியாக உள்ளது. எனவே நெல் சாகுபடியை கைவிட்டிருந்த விவசாயிகள் மீண்டும் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X