search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பூசி செலுத்தும் பணி
    X
    தடுப்பூசி செலுத்தும் பணி

    தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை நெருங்கியது

    தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 15,379 ஆக இருந்த நிலையில் இன்று 17,934 ஆக உயர்ந்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,56,281 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 17,934 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 15,379ஆக இருந்த நிலையில் இன்று 17,934 ஆக உயர்ந்துள்ளது.

    மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 47 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது.  பாதிப்பு விகிதம் 11.5 சதவீதமாக உள்ளது.

    அதிகபடச்மாக சென்னையில் 7372 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 1840 பேருக்கும், கோவையில் 981 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 620 பேருக்கும், திருவள்ளூரில் 931 பேருக்கும், மதுரையில் 498 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று ஒரே நாளில் 4,039 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 21 ஆயிரத்து 725 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,905 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 88,959 ஆக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×