search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்களப் பணியாளர்களுக்கு மூன்றாம் தவணை கோவிட் தடுப்பூசி
    X
    முன்களப் பணியாளர்களுக்கு மூன்றாம் தவணை கோவிட் தடுப்பூசி

    திருவாரூரில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

    திருவாரூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முன்களப் பணியாளர்கள்& 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது
    திருவாரூர்:

    திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுபாட்டு மையத்தில் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 
    60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை 
    3-ம் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதை பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உடனிருந்தார். மாவட்டத்தில் 8,071 நபர்கள் தகுதியுள்ளவர்கள் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 

    மேலும் அனைத்து முன்களப் பணியாளர்கள் மற்றும் இணைநோய் கொண்டுள்ள 60 வயது மேற்பட்டவர்கள் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 9 மாதங்கள்-39 வாரம் கடந்தவர்கள் இந்த தடுப்பூசி முகாமில் முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    நிகழ்ச்சியில் துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, குடும்பநல துணை இயக்குநர் உமாமற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×