search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் சிக்கிய லாரி
    X
    விபத்தில் சிக்கிய லாரி

    சாலையோர கடைக்குள் லாரி புகுந்து விபத்து

    பாலமேடு அருகே சாலையோர கடைக்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளானது.
    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் இன்று காலை கிராவல் மண் ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. முடுவார்பட்டி, 1&வது வார்டு சாலையில் வந்தபோது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. 

    அதே வேகத்தில் சாலையோரத்தில் இருந்த 2 பலசரக்கு கடையின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது  கடை முன்பு பொதுமக்கள் யாரும் இல்லாததால்  உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால் விபத்தில் கடையின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சுவர்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன.

    இந்தப்பகுதியில் அதிக அளவில் லாரிகள் சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு இருப்பதாலும், அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும் முடுவார்பட்டி 1-வது வார்டு பஸ் நிலையம் முன்பும், அங்குள்ள அரசு பள்ளி முன்பாகவும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×