என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலையோர கடைக்குள் லாரி புகுந்து விபத்து
Byமாலை மலர்12 Jan 2022 10:28 AM GMT (Updated: 12 Jan 2022 10:28 AM GMT)
பாலமேடு அருகே சாலையோர கடைக்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளானது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் இன்று காலை கிராவல் மண் ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. முடுவார்பட்டி, 1&வது வார்டு சாலையில் வந்தபோது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அதே வேகத்தில் சாலையோரத்தில் இருந்த 2 பலசரக்கு கடையின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது கடை முன்பு பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால் விபத்தில் கடையின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சுவர்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன.
இந்தப்பகுதியில் அதிக அளவில் லாரிகள் சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு இருப்பதாலும், அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும் முடுவார்பட்டி 1-வது வார்டு பஸ் நிலையம் முன்பும், அங்குள்ள அரசு பள்ளி முன்பாகவும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X