search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட பீடி தொழிலாளர்கள்
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட பீடி தொழிலாளர்கள்

    போராட்டத்தில் ஈடுபட்ட பீடி தொழிலாளர்கள்

    பாவூர்சத்திரம்-செட்டியூர் சாலையில் உள்ள தனியார் பீடிக்கடையில் பொங்கல் போனஸ் வழங்கவில்லை என்று கூறி பீடி சுற்றும் பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    வீ. கே. புதூர்:

    பாவூர்சத்திரம்-செட்டியூர் சாலையில் தனியார் பீடி கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் பாவூர்சத்திரம், செட்டியூர், பஞ்சபாண்டியூர்  ஊர்களில் இருந்து பெண்கள் பலர் பீடி சுற்றி வருகின்றனர். 

    இங்கு பீடி சுற்றும் பெண்களுக்கு 2 ஆண்டுகளாக பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை என்றும் தரமான இலை, தூள் வழங்க வேண்டும் என்றும் கடை முன்பு பீடி சுற்றும் பெண்கள்,  பீடி தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகி தர்மக்கனி, மாவட்ட பொருளாளர் ஆரிய முல்லை தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

    அந்த இடத்திற்கு மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் ஆகியோர் விரைந்து வந்து கடை நடத்துபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இதுகுறித்து கடை மேலாளர் கூறுகையில், பீடி கடையின் தலைமை இடத்தில் கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். அதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×