search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலத்தில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

    சேலத்தில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பெரியார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் மனைவி யமுனா (வயது 41). இவர் சேலம் ஆத்தூர் பைபாஸ் சாலையில் சன்னியாசி குண்டு அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். 

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் யமுனாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி மறைந்தனர். 

    இதுகுறித்து யமுனா கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


    Next Story
    ×