search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    X
    மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

    தேசிய அளவிலான யொங்மூடோ போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

    தங்கம், வெண்கலப்பதக்கம் வென்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    திருவாரூர்:

    தேசிய அளவிலான யொங் மூடோ விளையாட்டுப் போட்டி 
    கோவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருவாரூர் 
    அருகே பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் 
    பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜெயசூர்யா 16 
    கிலோ எடை பிரிவினருக்கான போட்டியில் முதலிடம் பெற்று 
    தங்கப் பதக்கம் வென்றார்.

    இதே பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவன் ரோகித் 27 
    கிலோ எடைப்பிரிவில் 3-வது இடம் பிடித்து வெண்கலப் 
    பதக்கம் வென்றுள்ளார். 

    இருவருக்கும் பள்ளியில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 
    ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ இளங்கோவன் தலைமை 
    வகித்தார்.
     
    பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நிவேதா, பெற்றோர் 
    ஆசிரியர் சங்க பொருளாளர் சங்கர், யுனெஸ் கோவின் திருவாரூர் 
    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய ஜான் அமல்தாஸ் 
    மற்றும் பெற்றோர்கள் ராதா, நர்மதா, ஆசிரியர்கள் மாலதி, 
    நல்லம்மாள், ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தலைமையாசிரியர் ஜெயந்தி வரவேற்றார். ஆசிரியர் மீரா 
    நன்றி கூறினார். மாணவர்களுக்கு பயிற்சி அளித்த 
    பயிற்சியாளர் குணசேகரன் பாராட்டப்பட்டார்.
    Next Story
    ×