search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    பெரியபாளையம் அருகே மாமியாரை வெட்டிக்கொல்ல முயன்ற மருமகன் கைது

    பெரியபாளையம் அருகே மாமியாரை வெட்டிக்கொல்ல முயன்ற மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ளது வேலகாபுரம் கிராமம், இந்திராநகர் மேட்டு காலனியை சேர்ந்தவர் பாக்கியவதி (வயது53). இவரது மகளை அதே கிராமத்தை சேர்ந்த ராஜதுரை என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில், பாக்யவதி பெயரில் உள்ள வீட்டு மனையை தனக்கு எழுதி கொடுக்குமாறு ராஜதுரை தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சொத்தை எழுதி கொடுக்க பாக்யவதி மறுத்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ராஜதுரை அரிவாளால் மாமியார் பாக்யத்தை வெட்டி கொல்ல முயன்றார். அவரிடமிருந்து தப்பிய பாக்யவதி இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி வழக்கு பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தார். அவரிடம் இருந்து 2 அடி நீளம் கொண்ட அரிவாள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×