search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாரச்சந்தையில் கூடிய மக்களை படத்தில் காணலாம்.
    X
    வாரச்சந்தையில் கூடிய மக்களை படத்தில் காணலாம்.

    செங்கோட்டை வாரச்சந்தையில் மக்கள் கூட்டம்

    செங்கோட்டை வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம் அலைமோதியது.
    செங்கோட்டை:

    செங்கோட்டையில் செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் வாரசந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி புளியரை, தெற்மேடு, கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு, தவணை, வல்லம், பிரானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்து செல்வது வழக்கம். 

    மேலும் பொங்கல் பண்டிகை நெருங்கியதையொட்டி நேற்று முககவசம் அணியாமல் ஏராளமான பொதுமக்கள் சந்தைக்கு வந்தனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் வாரச்சந்தை நடைபெறும் இடங்களில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    Next Story
    ×