என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போதை பொருட்கள் விற்ற வடமாநில வாலிபர் கைது
Byமாலை மலர்12 Jan 2022 8:58 AM GMT (Updated: 12 Jan 2022 8:58 AM GMT)
மளிகைக் கடையில் சோதனையிட்டபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட 20 கிலோ பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர் .
அப்போது நொச்சிபாளையம் - மீனாம்பாறை சாலையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சோதனையிட்டபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட 20 கிலோ பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து மளிகை கடை நடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அராத் மாலிக் (வயது 32) என்பவரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X