search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்ஜிஆர்
    X
    எம்ஜிஆர்

    அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

    வருகிற 17-ந்தேதி தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் வரும் 17.1.2022 (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.

    கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்ப்பரவல் அதிகமாகி வருவதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூகப் பொறுப்புணர்வோடு புரட்சித்தலைவரின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள கழக அலுவலகங்களிலும், அவரவர் இல்லங்களிலும் கொண்டாடிடுமாறு கழக உடன்பிறப்புகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    புரட்சித்தலைவரின் உருவப் படத்தினை அலங் கரித்துவைத்து, மலரஞ்சலி செலுத்தி, புரட்சித்தலைவர் காட்டிய பாதையில், புரட்சித் தலைவி அம்மா கற்றுத்தந்த உள்ளத்துணிவோடு பயணிக்க உறுதி ஏற்றிடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×